Mai 20, 2024

சிறீதரன்,கஜேந்திரன் களத்தில்!

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டத்தினில் இரவிரவாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்பி கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் ஒருபுறமும் இன்னொருபுறம் கூட்டமைப்பின் எம்பி சிறீதரனும் காவல் காத்திருந்தனர்.

முன்னதாக சிறீதரன் நேற்றிரவு நல்லூர் ஆலய சூழலிலுள்ள தனது வீட்டிலிருந்து வருகை தந்து நேற்று நள்ளிரவு தாண்டியும் சுழற்சி முறையில் தொடர்ந்த போராட்டத்தில் பங்கெடுத்திருந்தார்.

சிறிது நேரத்தில் நல்லூர் ஆலய பின்வீதியை அண்டி வசித்துவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்பி கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.