März 18, 2024

ஆண்டு ஒன்று… கடந்து சென்றது.


மனிதருள் மாணிக்கம்.
வண்ணைஅண்ணா
என்றும் என்
நேசிப்பில் நீங்கள்.
என்றும் என் வாசிப்பிலும்
உங்கள் கவிதைகள்.
என்றும் என்
யோசிப்பிலும் நீங்கள்.
வண்ணை எனும்
தமிழ் பண்ணையில்
தானே நான் பயின்றேன்.
உங்களால் தானே
கவிஞனாக முயன்றேன்.
நீங்கள் கொந்திய
மாங்காயில் சிந்திய
சுவைகளில் தானே
என் நாடகங்களுக்கு
கருக்கள் கிடைத்தன.
படைப்பாளிகள்
இல்லம் தேடி வந்தால்
ருசிக்க உணவும்
வாசிக்க நூல்களும்
வழங்கி தமிழால்
உணர்வூட்டி மகிழ்வீர்கள்.
மனிதருள் மாணிக்கமாய்
நித்தமும் திகழ்ந்தீர்கள்.
காலங்கள் வாழ்த்தும்
காவிய நாயகர்களில்
என்னையும் இணைத்து
ஆவணப்படுத்தினீர்கள்.
கவிஞன்
எழுத்தாளன்
இயக்குனர்
நடிகர் என்பன தாண்டி
மனிதனாய் மனங்களில்
வாழும் வரம் பெற்றீர்கள்.
உங்கள் நினைவுகள்
என்றும் எம்மோடு நீளும்.
வண்ணை அண்ணா
வாழ்க உங்கள் திருநாம ம் .
பிரியமுடன்
தம்பி த. தயாநிதி.
பிரான்ஸ்
22.01.2022

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert