புகையிரத விபத்து தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் அவசர வேண்டுகோள்

இன்று (16)மதியம் 2 மணியளவில் தலைமன்னார் பியர் புகையிரத கடவையில் நடைபெற்ற தனியார் பேருந்து புகையிரத விபத்தினால் இரண்டு பேர் பலியானதாகவும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கும் இந்த நேரத்தில் காயப்பட்டவர்கள் விரைவாக குணமடைய செய்வதற்காக குருதி தட்டுப்பாடுகள் நிலவுவதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன
எனவேகுருதிக் கொடையாளர்கள் மனமுவந்து வைத்தியசாலை நிர்வாகத்தினர் உடன் தொடர்பினை ஏற்படுத்தி குருதிக்கொடையினை வழங்கி காயப்பட்டு இருப்பவர்களை காப்பாற்ற முன்வருமாறு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் குருதிக் கொடை யாளர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்
அத்துடன் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்
இதே நேரம் விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்று நிலைமைகளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் பார்வையிட்டு வருகின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
2
2 Shares
Like

Comment
Share