வெள்ளை வானால் கடத்தப்பட்ட யுவதி தொடர்பில் பின்னணியில் யார் வெளியானது அதிர்ச்சி தகவல்

வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்ட எனது மகளை கண்டு பிடித்து தாருங்கள் கதறும் பெற்றோர்

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் எனது வீட்டில் வெள்ளைவான் ஒன்றில் வந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனை கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் விஸ்னுகாந்தன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் எனது பிள்ளையை கடத்தி சென்றுள்ளனர்

கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை எனது வீட்டை உடைத்து தாக்குதலை நடாத்திவிட்டு நித்திரையில் இருந்த எனது 21 வயதுடைய மகளை கடத்திச் சென்றுள்ளனர்

சம்பவதினமான அதிகாலை ஒரு மணிக்கும் 1.30 மணிக்கும் வெள்ளைவான் ஒன்றில் 4 பேர் கொண்ட குழுவுடன் நுழைந்த விஸ்னுகாந்தன் வீட்டின் வெளிக்கதவின் பூட்டினை உடைத்து வாசல்கதவை உடைத்து உள்நுழைந்து என்னை பொல்லால் தாக்கியபோதும் அவர்களை நான் திருப்பி தாக்க முற்பட்ட போதும் அதனை முறியடித்துவிட்டு நித்திரையில் இருந்த 21 வயது எனது மகளை இழுத்து சென்றுவிட்டனர்.

மேற்படி விடையம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செயப்பட்ட போதுதிலும் பொலிசார் குறித்த விடையத்தை இருட்டடிப்பு செய்து சிறிலங்கா பொதுஜன பெரமுனை கட்சி பாராளுமன்ற வேட்பாளர் விஸ்னுகாந்தனை பாதுகாத்து வருகின்றனர்
என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

கடத்திச் சென்ற நபர் டக்களஸ் தேவனந்தா, வியாளேந்திரன், கருணா,பிள்ளையான் போன்றோரின் முக்கிய சகா என அடையாளம் காணப்பட்டுள்ளார் குறித்த நபர் பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனை கட்சியின் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட்டவர் இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைவருமான விஸ்னுகாந்தன் என்பவரே இவ்வாறு வெள்ளை வான் கும்பல் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

குறித்த நபர் கடந்த காலங்களில் பணம் பறித்தல் ஆழ் கடத்தல் போன்ற விடையங்களில் ஈடுபட்டு வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட நிலையில் இப்போது பெண்ணை கடத்திச்சென்று தலைமறைவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது