Mai 5, 2024

ஈழத்தமிழர்களுக்கு 4000 ரூபா நிதியாம் . நன்றி தெரிவித்த இராமகிருட்டிணன்

தமிழ்நாட்டில் வாழும் ஈழ மக்களுக்கு நிவாரண நிதியாக 4000 ரூபாய் அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஈழத்தமிழர் அகதி முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு நிவாரண நிதியாக 4000 ரூபாயும், முகாமுக்கு வெளியே தமிழ்நாட்டில் வாழும் 13 ஆயிரத்து 553 ஈழத்தமிழர்கள் குடும்பங்களுக்கும் நிவாரண நிதி வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு குடி உரிமை வழங்க வலியுறுத்துவோம் என்ற வாக்குறுதியை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய ஒன்றிய பிரதமர் மோடி அவர்களை சந்தித்தபோது ஈழத் தமிழர்களுக்கும் சமமான அரசியல் மற்றும் குடி உரிமை உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்திய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.