Mai 3, 2024

தொடருந்துகள் 2 எதிர் எதிரே மோதல் 30 பலி!

பாகிஸ்தானில் 2 விரைவு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோட்கி மாவட்டத்தில் சர் சையது விரைவு தொடருந்தும், மில்லத் விரைவு தொடருந்தும் இன்று நேருக்கு நேர் மோதின. இதில் 14 தொடருந்துப் பெட்டிகள் தடம் புரண்டதில் 30 பேர் பலியானதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கோட்கி மாவட்டத்தின் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.