Mai 3, 2024

ஈரானிய ஜனாதிபதி நாளை இலங்கையை வந்தடையவுள்ளார்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு , நாளை புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளார்.

ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் டொலர் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் உமா ஓயா பல்நோக்குத்திட்டத்தைத் திறந்துவைப்பதே ஈரானிய ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தைத் திறந்துவைப்பதற்காக இலங்கைக்கு வருகைதரவிருக்கும் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி நாளை கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைவார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அத்தோடு உமா ஓயா திட்டத்தைத் திறந்துவைத்தன் பின்னர், அன்றைய தினமே அவர் நாட்டிலிருந்து புறப்படுவார் எனவும் அறியமுடிகின்றது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert