Mai 9, 2024

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் ஊடக சந்திப்பு!

தங்களுடைய கோரிக்கையின்படியே வடகடலில் பேரூந்துகள் இறக்கப்பட்டதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அத்தோடு இனிவரும் காலங்களிலும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளது.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சங்கத்தின் அன்னலிங்கம் அன்னராசா இவ்வாறு தெரிவித்துள்ளார்.