Mai 3, 2024

ஒவ்வொன்றாக மறையும் ஈழயுத்த நேரடி சாட்சியங்கள்!

இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி நீதி கோரி போராடிய மற்றுமொரு தாயார் உயிரிந்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் காணாமல் ஆக்கப்பட்ட செஞ்சுடர் மாஸ்டரின் தாயாரும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேராவின் தாயாரும் ஆகிய தேவகி அம்மா, புற்றுநோயினால் இன்று உயிரிரழந்துள்ளார்.

வவுனியாவை வசிப்பிடமாக கொண்ட அவர் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தேடியலைந்திருந்த நிலையில் மகனைக் காணாமல் உயிரிழந்துள்ளார்.

மகன் பற்றிய நம்பகமான செய்தி அறியாமலும், நீதி மறுக்கப்பட்ட நிலையிலும் இறைபாதம் எய்திய தாயாருக்கு தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வவுனியா சங்கத்தினர் தமது இரங்கல் அஞ்சலிகளை தெரிவிப்பதோடு, தாயாரின் குடும்பத்தினரது துயரிலும் கலந்து கொள்கின்றனர்.