April 26, 2024

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்த ஐஸ்வர்யா ராய்!

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் மீண்டும் தொடங்கி இருக்கிறது. இதில் முக்கிய காட்சிகளை படமாக்க இயக்குனர் மணிரத்தினம் திட்டமிட்டிருக்கிறார். இதனால் நடிகர்கள் கார்த்திக், பார்த்திபன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பாண்டிச்சேரி சென்று உள்ளனர்.

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராயும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் தற்போது இணைந்துள்ளர். இங்கு நடைபெறும் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அனைவரும் ஐதராபாத் செல்ல இருக்கின்றனர்.

இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் படத்தின் போஸ்டர் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.