April 25, 2024

அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்த பா.இரஞ்சித்

அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்த பா.இரஞ்சித்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் பா.இரஞ்சித், தான் அடுத்ததாக இயக்க உள்ள படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பா.இரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் இயக்கிய மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை இயக்கி முடித்துள்ளார் பா.இரஞ்சித். இப்படம் வருகிற ஜூலை 22-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ள பா.இரஞ்சித், சமீபத்திய பேட்டியில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, அப்படத்திற்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’ என பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ள பா.இரஞ்சித், இது முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக உருவாக உள்ளதாக கூறியுள்ளார். இதில் நடிக்கப்போகும் நடிகர், நடிகைகள் யார் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.