பிரான்சில் நடைபெறும் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்
![](http://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/08/safe_image-75.jpg)
![](https://1.bp.blogspot.com/-1f2-OJnI_PQ/Xy_H41eV6gI/AAAAAAAAU8w/aWmpzdF9zZ0cfWUZkqwg09SiS4DccuWtgCLcBGAsYHQ/s0/unnamed%2B%252810%2529.jpg)
நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020 இன் ஐந்தாவது நாள் போட்டிகள் இன்று 09.08.2020 ஞாயிற்றுக்கிழமை சேர்ஜி மற்றும் கிறித்தைல் ஆகிய பகுதிகளில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறுகிறது.இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 26.12.2007 அன்று நெடுந்தீவுக் கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி ஈழவீரன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன.
கடந்த 12.07.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வில்நெவ் சென்ஜோர்ஜ் பகுதியில் முதல் நாள் போட்டிகள் விறுவிறுப்பாக ஆரம்பமாகித் தொடர்ந்து நான்கு வாரங்கள் கிறித்தைல் பகுதியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.