Mai 4, 2024

சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை..காரணம் இதுதான்

சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை..காரணம் இதுதான்

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்துக்கு உதவும் வகையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வருகிறது.

ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை பெற்ற கடன்களுக்கான தவணைக்கொடுப்பனவுகளின் நிலுவை இருக்கும் நிலையிலேயே அவசர உதவி என்ற அடிப்படையில் இலங்கை நிதியுதவியைக் கோரியுள்ளது.

இந்தநிலையில் இந்த நிதியுதவி விடயத்தில் இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணயநிதியத்தி;ன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமது உறுப்பு நாடுகளில் 50 நாடுகளுக்கு சர்வதேச நாயண நிதியம் நிதியுதவிகளை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.