Juli 27, 2024

கொரோனா வந்தால் அரசே பொறுப்பு; சீறிபாய்ந்த வடிவேலு

எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

எனவே, அவர்களில் யாருக்காவது கொரோனா வைரஸ் பரவினால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமும், கம்பனிகளும் ஏற்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதுளை, ஹாலிஎல பகுதியில் இன்று (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.