April 26, 2024

மருத்துவப் படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கவேண்டும் முதலமைச்சருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்

மருத்துவப் படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கவேண்டும்  என தமிழக முதலமைச்சர் மு.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்து கடிதம் ஒன்றை எழுத்தியுள்ளார் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள். அவர் எழுத்தி கடிதம் வருமாறு:-

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் ஒரு இலட்சம் பேருக்கு மேல் ஈழத் தமிழ் அகதிகள் முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் பல தமிழ்நாட்டிலேயே பிறந்தவையாகும். இந்தப் பிள்ளைகள் முகாம்களின் அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றன. மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு எழுத அவர்கள் விரும்பிய போது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன. உடனடியாக தமிழக முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் குறிப்பிட்ட அளவுக்கு இடம் அவர்களுக்கு ஒதுக்கி நீட் தேர்வு எழுதவும் அவர்களை அனுமதிக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.

அன்புள்ள,
பழ.நெடுமாறன்
தலைவர்.