April 26, 2024

கிளிநொச்சியில் வி.டுதலைப் பு.லிகள் சின்னத்துடன் இளைஞன் கைது : தொலைபேசியில் காணப்பட்டவை என்ன?

 

த.மிழீழ வி.டுதலைப் பு.லிகள், நாம் தமிழர் கட்சி மற்றும் ஆவா குழுவின் சின்னம் எனக் கூறப்படும் சின்னங்களை தன்னுடை அலைபேசியில் வைத்திருந்த இளைஞன், கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இரும்பு வாள் ஒன்றை மறைத்த வைத்திருக்கின்றார் என விசேட அதி.ரடிப்படை.யினரின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன், நேற்று (08) கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து வாள் ஒன்றும், அலைபேசிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவ்விரு அலைபேசிகளையும் சோதித்த போது, த.மிழீழ வி.டுதலைப் பு.லிகள் அமைப்பு, நாம் தமிழர் கட்சி மற்றும் ஆவா குழுவின் புகைப்படங்கள்
இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு வா.ள்களுடன் இளைஞர் ஒருவர் இருக்கும் புகைப்படமும் காணப்பட்டுள்ளது. என பொலிஸார் தெரிவித்தார்.

அந்த புகைப்படத்துடன் இருக்கும் இளைஞன் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.