April 25, 2024

யாழில் காதை கடித்த தம்பி, மண்டையை உடைத்த அண்ணன்

வாய்த்தர்க்கம் முற்றியதில் அண்ணனின் காதை தம்பி கடித்து துப்பிய நிலையில் தம்பியின் தலையை அண்ணன் அடித்து உடைத்துள்ளான்.

குறித்த சம்பவம் யாழ்.தென்மராட்சி – நாவற்குழிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியதில் அண்ணனின் காதை தம்பியார் கடித்து காயப்படுத்தியுள்ளார்.

இதனால் கோபமடைந்த அண்ணன் அருகில் இருந்த தராசினை தூக்கி தம்பியின் தலையைப் பதம் பார்த்திருந்தார்.

தலை மற்றும் காதுப் பகுதியில் படுகாயமடைந்த 32 மற்றும் 37 வயதான சகோதரர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.