April 27, 2024

மன்னாரில் நினைவேந்தல்!

இறுதி யுத்தத்தின் போது முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு இன்றைய தினம் (13), நானாட்டான் பிரதேச சபையின் 39 ஆவது அமர்வின் போது சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நானாட்டான் பிரதேச சபையின் 39ஆவது அமர்வு இன்று  (13) காலை 10 மணியளவில், நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர்  திருச் செல்வம் பரஞ்சோதி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது நானாட்டான பிரதேச சபையின் உறுப்பினர் ஆர்.ஜீவனின் ஏற்பாட்டில், இறுதி யுத்தத்தின் போது முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.