Mai 9, 2024

துயர் பகிர்தல் பூலோகராணி சிவலிங்கம்

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பூலோகராணி சிவலிங்கம் அவர்கள் 25-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மருதலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வரஞ்சினி(சுகன்யா- கனடா), சிவராம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு தாயாரும்,

ரவீந்திரன், கிருபாரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாலபூபதி, கனகலிங்கம், சண்முகராஜா, ஜீவமணி(மணி), புஷ்பராணி(கிளி), யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கமலேஸ்வரி மற்றும் கமலாதேவி, மதனராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரஜீவ் – அரினி, ரெபேக்கா – சாய்வதனன், சிவன்ஜீவ் – அருளினி, கிருத்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யுவன், அஜானா, திராவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வரஞ்சினி(சுகன்யா) – மகள்

சிவராம் – மகன்