Mai 4, 2024

மட்டக்களப்பு நகர வர்த்தகர்கள் 26 பேருக்கு தொற்று…!

மட்டக்களப்பில் தற்போது நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அனைத்து வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோருக்கான ஆன்டிஜன் பரிசோதனைகள் காந்தி பூங்காவில் இடம்பெற்றது.

இந்நிலையில், மட்டக்களப்பு நகர் பகுதி வர்த்தகர்கள் 553 பேரிடம் மேற்கொண்ட ஆன்டிஜன் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 22 பேர் காத்தான்குடியை சேர்ந்தவர்களெனவும் தெரியவந்துள்ளது.

மேலும், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பணிபுரியும் 17 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.