சாதாரணதரப் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிப்பு – மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சாதாரணதரப் பரீட்சை மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11 வரை நடைபெறும் என கூறினார்.

க.பொ.த. சாதாரண பரீட்சையை அடுத்த ஆண்டு ஜனவரி 18 முதல் 27 வரை பரீட்சையை நடத்த முன்னர் முடிவு செய்யப்பட்டது.

இருப்பினும் கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் நிலைமையையும் மாணவர்களின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டும் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.