April 26, 2024

வீடுகளை கையளிக்காத 22 பேர்; யாரவர்கள்?

அதிகாரபூர்வ இல்லங்களை கையளிக்காத தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளின் 22 முன்னாள் எம்பிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதனை அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன உறுதி செய்துள்ளார்.

அவர்களின் பெயர்கள் வருமாறு,

– செல்வம் அடைக்கலநாதன்
– வடிவேல் சுரேஷ்
– எல்ஏஎம். ஹிஸ்பல்லாஹ்
– ரவூப் ஹக்கீம்,
– அப்துல் ஹலீம்
– அமீர் அலி
– எச்எம்எம். ஹரிஸ்
– பைசால் ஹஷிம்
– பைசர் முஸ்தாபா
– சத்திரானி பண்டார
– லக்ஷ்மன் செனவிரத்ன
– ரவீந்திர சமரவீர
– எட்வேட் குணசேகர
– நலின் பண்டார
– ஜேசி. அலவத்துவல
– அசோக் அபேசிங்க
– சம்பிக பிரேமதாச
– துலிப் விஜயசேகர
– தினேஷ் கன்கந்த
– ரிபி. ஏக்கநாயக்க
– சந்திம வீரக்கொடி
– ஜகத் புஸ்பகுமார