இசைப்பிரியாவிற்கு இன்று 38!
![](http://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/05/1-4.jpg)
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் 38வது பிறந்த தினம் இன்றாகும்.இந்நிலையில் இசைப்பிரியா நினைவாக அவளை அறிந்த உறவுகளுக்கு 100 பயன்தரு பழமரக்கன்றுகளை வழங்கியுள்ளார் அவரது நண்பியொருவர்.
நினைவுகளாக அவையும் பயன்தரட்டும் என தெரிவித்துள்ள அவர் இசைப்பிரியாவின் பிறந்தநாள் இன்று – ஒரு சிறுகதையாய் மலர்ந்தவள் தொடர்கதையாய் போனாள் என நினைவுமீட்டியுள்ளார்.
1982ம் ஆண்டின் இதே நாளன்று பிறந்த இசைப்பிரியா 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது இலங்கை இனஅழிப்பு படைகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது