Mai 1, 2024

பிரித்தானியாவில் மதிப்புமிக்க விருது பெறும் யாழ் பெண்!!

இங்கிலாந்தில் வழங்கப்படும் த டயானா விருது 2021 விருது பெறுபவர்களில் இரண்டு இலங்கையர்களும் உள்ளடங்கியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவரும், கொழும்பை சேர்ந்த ஒருவரும் இந்த விருதிற்கு தெரிவாகியுள்ளனர்.

யூடியூபில் திரையிடப்பட்ட 2021 மெய்நிகர் டயானா விருது வழங்கும் விழாவின் போது, கொழும்பைச் சேர்ந்த ஜனித் பிரபாஷ்வேர பெரேரா மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனோஜிதா சிவாஸ்கரன் ஆகியோர் நேற்று (28) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் இங்கிலாந்து இளவரசர் ஹரி கலந்து கொண்டிருந்தார்.