Mai 2, 2024

நாடு நாடாக கூலிக்கு அனுப்புகின்றோம்:கோத்தா அரசு

 தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டின் பொருளாதாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை, தற்காலிக டொலர் நெருக்கடியே ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று (27) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மகளிர் அதிகார சபையில் உரையாற்றினார்.

“இந்த நாட்டின் பொருளாதாரத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்களுக்கு ஒரே ஒரு பிரச்சனை மட்டுமே உள்ளது. எங்களுக்கு டொலர்பிரச்சனை இருக்கிறது.

 இப்போது, ​​கிட்டத்தட்ட 200,000 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். மேலும் 100,000 அனுப்பப்படும். உலகின் பலம் வாய்ந்த நாடுகளில் இலங்கையர்களுக்குச் சென்று பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் திறக்கப்படுகின்றன. இது ஒரு தற்காலிக பிரச்சனை,“ என்றார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert