April 26, 2024

இலங்கையிலிருந்து தப்பிக்க நாளுக்கு மூவாயிரம் பேர்!

இலங்கையிலிருந்து வெளியேற ஏதுவாக கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 3,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், நாளாந்தம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு – மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் யூ.வி. சரத் ரூபசிறி இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமெரிக்க கிரீன் கார்ட் லொட்டரிக்காக, கடவுச்சீட்டுக்களைப் பெற ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன்,  ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக சுமார் 1,800 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

பொதுவான சேவையின் கீழ் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 1,000 விண்ணப்பங்களும் பெறப்படுகின்றன.

கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் மும்மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.