April 24, 2024

மருந்துகளும் கட்டுப்பாட்டிலில்லையாம்?

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளின் விலை மீண்டும் எகிற தொடங்கியுள்ளமையை முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண அம்பலப்படுத்தியுள்ளார்.

முன்னதாக நல்லாட்சியில் மருந்து விலை குறைப்பு வேலைத்திட்டத்தின் கீழ்,

பல நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் பல அத்தியாவசிய மருந்துகளின் விலை

பெரும் குறைப்புக்கு சுகாதார அமைச்சராக கலாநிதி ராஜித சேனாரத்ன பணிகளை செய்தார்.

சர்க்கரை நோய்,உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இரைப்பை அழற்சி நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் அதிக மதிப்புள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகள்,வலி நிவாரணி மருந்துகள் உள்ளிட்டவற்றின் விலையை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது அம்மருந்துகளின் விலைகள் கட்டுப்பாடற்று அதிகரித்துவருவது தொடர்பில் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.