Mai 5, 2024

தமிழீழ மக்களின் வேண்டுகோள் இதுவே! இலங்கை அரசின் திட்டத்தை பகிரங்கப்படுத்தும் காசி ஆனந்தன்

இலங்கைத் தீவில் தமிழீழத்தில் சிங்களவர் குடியேற்றத்தை நிறைவு செய்து அதன் தாயகத் தன்மையை அழித்துவிட்டால் இலங்கை ஒற்றைச் சிங்கள நாடாக்கிவிட்டால அதன் பின்பு இலங்கையில் தலையிடும் உரிமையையும், தகுதியையும் இந்தியா இழந்து விடும் என்பதே இலங்கை அரசின் கணக்காகும் என ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும், வேளைக்கு வேளை மேடைகளை அமைத்து நாடகங்களை அரங்கேற்றும் சிங்கள ஆட்சியாளர்களிடம் இந்திய அரசு இனியும் ஏமாறக்கூடாது என்பதே தமிழீழ மக்களின் பணிவான வேண்டுகோளாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Gallery Gallery