April 25, 2024

அரசியல் பிரமுகர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் வாபஸ் என அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரிமாதம் வரை அவதூறுப் பேச்சுக்களுக்காக, தேசியமுற்போக்குத் திராவிடக் கழகத்தின் தலைவர் திரு.விஜய்காந்த் மற்றும் திருமதி பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் திரு. E.V.K.S. இளங்கோவன்மற்றும் திருமதி விஜயதாரணி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், திரு. G. ராமகிருஷ்ணன், அரசியல் பிரமுகர்கள் திருவாளர்கள்.

பழ.கருப்பைய்யா மற்றும் நாஞ்சில் சம்பத், அறப்போர்இயக்கத்தின் திரு. ஜெயராம் வெங்கடேசன், திரு. கணேசன், (RSYF), திராவிட முன்னேற்றக் கழகத்தின்திருவாளர்கள் K.N. நேரு மற்றும் S.M. நாசர், பாராளுமன்ற உறுப்பினர்கள் திருமதி.M.K.கனிமொழி, திருவாளர்கள் தயாநிதிமாறன், R.S. பாரதி, S.R.பார்த்திபன் மற்றும் திமுக தலைமைக்கழகப் பேச்சாளர்கள் ஆகியோர் மீது சுமார் 130 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.

அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது தொடரப்பட்டஅனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப்பெறவும், அதன் மீதான அனைத்து மேல்நடவடிக்கைகளையும் கைவிடவும், மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்அவர்கள் ஆணையிட்டுள்ளார்.