April 26, 2024

youtube உங்கள் பதிவுகளை தடுத்தால் உடன் அவர்களுக்கு உங்கள் உரிமைகளை தையிரியமாக எழுதுங்கள் !நிச்சயம் தடை நீங்கும்!

ARCHIV - 15.03.2019, Schleswig-Holstein, Aukrug-Homfeld: ILLUSTRATION - Ein Mann mit Smartphone steht vor dem Logo der Internet-Videoplattform Youtube. (Zu dpa "Alphabet enttäuscht Anleger - und legt erstmals Youtube-Zahlen offen") Foto: Carsten Rehder/dpa +++ dpa-Bildfunk +++

அன்பான ஈழ தேசத்து உறவுகளே. உங்களுக்கான ஒரு நல்ல செய்தி ஒன்று.நீங்கள் youtube இல் பதிவு எற்றி அந்த பதிவுக்கான நிராகரிப்பை youtubeசெய்திருந்தால்.நாங்கள் அவர்களுடன் சரியான முறையில் அதற்கான காரணங்களை எழுதி எங்கள் நாட்டு நிலைமையும் எங்கள் வாழ்வின் நிலைமையையும் எமது தேசிய மனித உரிமையையும் நிலைநிறுத்தி காரணங்களை எழுதும் போது நிச்சயமாக youtube.நிர்வாகிகள் அதை ஏற்று தடை செயத எங்களுடைய  காணொளியை மீண்டும் காண்பதற்காக.விடுவிக்கிறார்கள் என்ற அந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எஸ் ரி எஸ் தொலைக்காட்சி நி‌ர்வாகம்  அறியத் தருகின்றது.

நாங்கள்.எங்களுடைய எஸ் ரி எஸ் தொலைக்காட்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது கூட ஒரு பதிவு அந்த இடத்தில் நின்ற ஒரு மருத்துவ உதவியாளரை நேர்காணல் கண்ட காணொளியை நாங்கள் பதிவேற்றி இருந்தோம். அது தடை செய்யப்பட்டது

நாங்கள் அதற்கான விளக்கங்களையும் ஈழதமிழினத்துக்கான உரிமைகளையும் அவர்களுக்கு எழுதி இருந்தபோது மீண்டும் அதை.காண்பதற்கு காட்சிக்காக அவர்கள் விட்டிருந்தார்கள்.

அதேபோல் கவிஞர் முகில்வாணன் அவர்களின்  மழை தருமோ மேகம் என்ற பாடலை எஸ் ரி எஸ் தொலைக்காட்சி நிறுவனம் அவரின் வேண்டுகோளுக்கிணங்கவும் அதை காட்சிப்படுத்தி.பதிவேற்றம் செய்திருந்தோம் அதில் எந்த வன்முறை காட்சிகளும் இல்லாத பட்சத்தில்அதை இன்று 23.07.2021 தடைசெய்திருந்தார்கள்

இயற்கை காட்சிகளும் எமது இறுதிப் போராட்டத்தில் மக்கள் முள்ளிவாய்க்கால் பகுதி உள்ளே இருந்து பஸ்களில் ஏற்றப்பட்டதும் மக்கள் ஒன்றுகூடி சென்ற பதிவுகளும் இத் தொகுப்பில் இணைக்கப்பட்டது . அதை தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் நாங்கள் youtube நிறுவனத்திற்கு எங்களுடைய வேண்டுதலையும் அந்த காரணங்களையும் தெளிவாக எழுதி இருந்தபடியால் அவர்கள் மீண்டும் இந்த பாடலை நாங்கள் பார்ப்பதற்கு விட்டுள்ளார்கள் என்பதை இங்கே.உங்களுக்கு கூறிக்கொள்கின்றோம். அனைத்து தமிழ்த் தேசத்து மக்களும் எங்கள் பதிவுகள் அவர்களால் நிறுத்தப்பட்டால் நீங்கள் உரிமையோடு அவர்களுக்கு கேட்டு சரியான விளக்கம் அளிக்கும்போது நிச்சயமாக அவர்கள் ஏற்று காண்பதற்காக விடுவிப்பார்கள்
என்பதை அறியத்தருகின்றோம் எல்லோரும் பயந்து இருப்பதன் மூலம் எமக்கு. எந்த முடிவும் வராது.ஆனால் எல்லோரும் இணைந்து எழுதும் போது நிச்சயமாக அவர்கள் செவிமடுப்பார்கள் என்பதுடன் எங்கள் பதிவுகள் அவர்களது தாய்மண் பதிவுகள் அந்த தளத்திலே இருக்கும் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். இதற்கு எமது இந்த இரண்டு காணொளிகளும் உதாரணம் என்பதை அறியத்தருகின்றோம்  எஸ்.தேவராசா