Mai 2, 2024

கோட்டாபய ஆட்சிக்கு வந்தபின்னர் – நாட்டை விட்டு வெளியேறும் அறிஞர்கள்

கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வெளிநாட்டுக்கு செல்வதற்காக ஆறு இலட்சம் இலங்கையர்கள் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

விசாவுக்கு விண்ணப்பித்தவர்களில் பெருமளவானோர் சிங்க பௌத்தர்களாவர்.

இலங்கை வரலாற்றில் பெருமளவு அறிஞர்கள் நாட்டை விட்டு வெளியேற விசாவுக்கு விண்ணப்பிப்பது இதுதான் முதற்தடவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.