April 27, 2024

யேர்மன் நாட்டில் இடம்பெற்ற பலஸ்தீனிய மக்களின் போராட்டம்.

பலஸ்தீனிய மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் மிலேச்சதனமான தாக்குதலுக்கு எதிராக இன்று யேர்மன் நாட்டில் Düsseldorf எனும் இடத்தில் ஓர் போராட்டம் இடம்பெற்றிருந்தது. இந்த போராட்டத்தில் தமிழ் மக்களும் எமது தேசிய அடையாளங்களுடன் பங்கெடுத்திருந்தனர்.
இந்த போராட்டத்தில் அதிக அளவிலான மக்கள் பங்கெடுத்திருந்தமையால் அவர்களை வீதியில் செல்ல யேர்மன் பொலிஸ் தடை விதித்தது அதனை எதிர்த்து பலஸ்தீனிய இளையோர் பொலிசாருடன் தங்கள் உரிமைக்காக வாதிட்டு இறுதியில் போராட்டத்தில் கலந்துகொண்ட அரைவாசி மக்களையே போராட்டத்தில் நடைபயணமாக வீதியில் செல்ல யேர்மன் பொலிஸ் அனுமதி வழங்கியிருந்தது.
இந்த போராட்டமானது முற்று முழுதாக பலஸ்தீனிய இளம் தலைமுறையினரால் ஒழுங்குசெய்யப்பட்டமை விசேட அம்சம் என அந்த போராட்டத்தில் பங்கெடுத்த தமிழர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.