Mai 11, 2024

முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நாளை முடிவு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மைத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். அப்போது, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ், எம்.பி.கள் திருச்சி சிவா, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ‘முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகான முதல் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுவதில் மகிழ்ச்சி. தி.மு.கவிற்கு பெரும்பான்மை வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு நன்றி. வெற்றிச் செய்தி வந்த போதும் கொரோனா பரவைலைத் தடுப்பது குறித்தே ஆலோசித்தேன். தமிழ்நாட்டில் தடுப்பூசி உற்பத்திக்கு உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் உற்பத்தி தொடங்கும்.
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நிபுணர் குழு, அனைத்துக் கட்சி உறுப்பினர் குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ₹25 கோடி மருந்து வாங்க ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 34,000 பேருக்கு நாளொன்றுக்கு தொற்று ஏற்படுகிறது. ஊரடங்கால் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்சிப் பொறுப்பேற்றதும் கொரோனா தடுப்பு எனும் சவாலான பணியில் ஈடுபட்டுள்ளோம். போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது. ஆட்சி அமைத்து 2 வாரத்தில் 16,832 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெற்றி பெற்றதை விட கொரோனா தொற்று இல்லாத நாளே மகிழ்ச்சியான நாள். 24 மணி நேர பொது முடக்கம் இருந்தால்தான் கொரோனா பரவல் கட்டுக்கள் வரும் என்றெல்லாம் சொல்கிறார்கள். பொது முடக்கம் நீட்டிப்பு குறித்து நாளைய தினம் நடைபெறும் நிபுணர்கள் குழு, அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘தமிழ்நாட்டில் தற்போது வரை 9 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பரவாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன’ என்றார்.

தொடர்ந்து பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ‘திருச்சி பெல், ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலைகளில் விரைவில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கும். நாற்பது நாட்களில் கிடைக்கும் என்றார்.