April 27, 2024

முள்ளிவாய்க்காலிற்கும் தடை!

முள்ளிவாய்க்கால் பகுதியில், நிiவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கோ, மக்கள் கூடுவதற்கோ, முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றுள்ளார்கள்.

கொரோனா நிலையை கருத்தில் கொண்டு, 16ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை, முள்ளிவாய்க்கால் பகுதியில், எந்த நிகழ்வும் நடத்தகூடாது என்றும் மக்கள் கூடக் கூடாது என்றும், பொது இடத்தில் வைத்து நினைவுகூர கூடாது என்றும், கோரி,  முல்லைத்தீவு பெரிஸார்; நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து, அதற்கான அனுமதியைப் பெற்றுள்ளார்கள்.

து.ரவிகரன், ம.ஈஸ்வரி, பீற்றர் இளஞ்செழியன், க.விஜிந்தன், ச.விமலேஸ்வரன் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, இந்த நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.