Mai 10, 2024

பிரித்தானியாவிலிருந்து வருபவர்கள் கனடாவிற்குள் நுழைய தடை!


பிரித்தானியாவுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை மேலும் நீட்டிப்பதாக கனடா அறிவித்துள்ளது.

நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக பிரித்தானியா அறிவித்ததை அடுத்து பல நாடுகளை போலவே கனடாவும் முதற்கட்டமாக அந்நாட்டிலிருந்து வரும் விமானங்களுக்கு 3 நாள் தடை விதித்தது.

திங்கட்கிழமை முதல் பிரித்தானியாவுக்கு விதிக்கப்பட்ட 3 நாள் தடை முடிவடையவுள்ள நிலையில், தடை மேலும் நீட்டிக்கப்படும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவிலிருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஜனவரி 6ம் தேதி வரை தடை விதிப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.

மேலும், கனடா கூடுதலாக ஒப்பந்தம் செய்த Pfizer தடுப்பூசி டோஸ்கள் ஜனவரி மாதம் கிடைக்கும் என கூறினார்.

அதேசமயம் பாதுகாப்பு ஊழியர்களின் புதிய தலைவராக Vice-Admiral Art McDonald நியமிக்கப்பட்டுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.