Mai 10, 2024

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் நாளில் உணவிற்காக கொட்டும் மழையில் நீண்ட வரிசையில் நின்ற மக்கள்!

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் நாளில், உணவு பொட்டலங்களுக்காக மக்கள் நீண்ட வரிசையில் கொட்டும் மழையில் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி, பார்ப்போர் மனதை கண்கலங்க வைக்கிறது.

ஐரோப்பியா நாடுகளில் ஒன்றான பிரித்தானியா கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நடுத்தர மக்களின் வாழ்க்கை இன்னும் சகஜ நிலைமைக்கு திரும்பவில்லை என்றே கூறலாம்.

இது அவர்களுக்கு ஒரு பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. அதில் சில குடும்பங்களுக்கு தங்களுக்கான பண்டிகை நாட்களில் உணவு பொருட்கள் கூட சிலரால் வாங்க முடியவில்லை என்பதை காட்டும் வகையில், இந்த கிறிஸ்துமஸ் நாளில் மக்கள் உணவுப் பொட்டலங்களாக மழையில் காத்திருக்கின்றனர்.

Newcastle பகுதியிலே சில மக்கள் இப்படி உணவு பொட்டலங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

உணவு வங்கியைச் சேர்ந்த, உணவு பொட்டலங்கள் வழங்கி வரும் John McCorry என்பவர், உணவுப் பொட்டலங்களுக்காக இவ்வளவு பேர் காத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தது.

நான் வேலை செய்ய சாலையில் வந்தேன், ஆனால் வெளியில் வந்து பார்த்த போது, இந்த காட்சி எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.

இதை எவ்வாறு விவரிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. இதுபோன்ற இழப்பில் பலரை உண்மையில் பார்ப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

மழையில் நனைந்து கொண்டு அவர் நினைவதை பார்த்தபோது, ​​ஓ கடவுளே. ஒழுக்கமான கிறிஸ்துமஸ் உணவைக் கொண்டிருப்பதை உறுதிசெய்ய இங்கு வர வேண்டிய மக்கள் மீது நான் வருந்துவதாக கூறியுள்ளார்.

மேலும், இது மிகப்பெரிய வரிசையாக இருந்தபோதிலும், நின்று கொண்டிருந்த எல்லோரும் மிகுந்த உற்சாகத்தில் இருந்ததாக கூறினார்.

கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து உணவுப் பாதுகாப்பின்மை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இது சமீபத்திய ஆய்வின் முடிவு என்பது நியூகேஸில் உள்ள பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உணவுப் பொட்டலங்களுக்காகக் காத்திருக்கும் மக்களுக்கு தொண்டு நிறுவனமோ அல்லது ஏதேனும் அமைப்போ கொடுக்கலாம்