Mai 10, 2024

மேல் மாகாண பாடசாலைகள் ஆரம்பிக்கின்றமை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானம்!

மேல் மாகாண பாடசாலைகள் ஆரம்பிக்கின்றமை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானம் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளை தான்; சந்தித்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து, திங்கட்கிழமை தீர்மானம் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.