Mai 10, 2024

குளம் திறக்க வருகின்றார் சவேந்திரசில்வா?

யாழ்ப்பாணத்தில் படையினரை தக்க வைக்க காரணங்களை தேடுவதில் மும்முரமாக அதன் தலைமை குதித்துள்ளது.இதன் தொடர்ச்சியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவீந்திர சில்வா நாளை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இராணுவத்தினரால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட குளத்தினை திறந்து வைப்பதற்காக யாழ்ப்பாணம் வருகிறார்.

யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் நெறிப்படுத்தலில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் விவசாய பயன்பாட்டுக்கு பாவிக்கமுடியாத நிலையில் காணப்பட்ட குளம் ஒன்று ராணுவத்தினரால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் புணர்நிர்மான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிப்பதற்காகவே விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அமைச்சர் வாசுதேவ நாணணக்காரவின் முன்னாள் செயலாளர் ஒருவரது அழைப்பின் பேரிலேயே குளம் புனரமைக்கப்பட்டதாக தெரியவருகின்றது.