Mai 9, 2024

துயர் பகிர்தல் திரு செல்வதுரை சிவயோகநாதன்

திரு செல்வதுரை சிவயோகநாதன்

(பழைய மாணவர் – St. Patrick’s College, Jaffna, தெல்லிப்பளை Mahajana College, Mascan Ltd கொழும்பில் உயர் பதவி வகித்து கடமை ஆற்றியவர்)

தோற்றம்: 17 ஜூன் 1941 – மறைவு: 10 டிசம்பர் 2020

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும்,  கொழும்பு கொட்டாஞ்சேனையை தற்போதைய  வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதுரை சிவயோகநாதன் அவர்கள் 10-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பி.ஸ் செல்வதுரை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

பரம்ஜோதிமலர் அவர்களின் அன்புக் கணவரும், காயத்ரி அவர்களின் அன்புத் தந்தையும்,

பாலசுப்ரமணியம்(பிரித்தானியா), காலஞ்சென்ற லோகாம்பிகை, கௌரிதேவி(கண்டி), சரவணபவன்(கனடா), வாமதேவன்(பிரித்தானியா), ரவிக்குமார்(கனடா), புருஷோத்தமகுமார்(பிரித்தானியா), சுபாஜினி(யாழ்ப்பாணம்), சுலோஜன(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

சுப்ரமணியம் ரமேஷ்  அவர்களின்  அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி, புஷ்பம்,  சண்முகநாதன் மற்றும் நேசமலர்(கனடா) , காலஞ்சென்ற சிவசோதிமலர், ரோஹிணிதேவி(நிக்கவரெட்டியா), பராமநாதன்(உடுவில்), ஜெகநாதன்(கனடா), பத்மாவதி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரகதி, சுஷேன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை  13-10-2020 திங்கட்கிழமை மு.ப 11:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை நடைபெற்று பின்னர்  பொரளை கனத்த மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் நேரம் மு.ப 08:30 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை. COVID 19  விதி முறைகளுக்கும் அறிவுறுத்தல்களுக்கும் இணங்கி நடைபெறும் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்:- குடும்பத்தினர் 
 
தொடர்புகளுக்கு:-
பரம்ஜோதிமலர் – மனைவி