Mai 10, 2024

நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை!

கடந்த 2017ம் ஆண்டில் இருந்து அரசியலில் களமிறங்கவிருப்பதாக கூறி வந்த ரஜினிகாந்த், புதிய கட்சி தொடங்கவிருப்பதாகவும் டிச.31ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அண்ணாத்த படத்தில் சூட்டிங் முடிந்த உடன் கட்சிப் பணியில் இறங்குவேன் என்றும் கூறியிருந்தார். மேலும், பாஜகவின் அறிவுசார் தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தியை தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் நியமித்தார

இதை தொடர்ந்து அர்ஜுன மூர்த்திக்கும், தமிழருவி மணியனுக்கும் ரஜினிகாந்த் சிறப்பு அதிகாரங்களை வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், ரஜினிகாந்த் அர்ஜுன மூர்த்தி மற்றும் தமிழருவி மணியனுடன் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். புதிதாக தொடங்கவிருக்கும் கட்சிப் பணிகள் குறித்து அவர் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.