ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்கு இணைக்கப்பட்டுள்ள யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்துள்ளார்.!

ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்கு இணைக்கப்பட்டுள்ள பயிலுநர்கள் மக்களின் தேவையறிந்து கடமையாற்ற வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்துள்ளார்.!

ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்கு இணைக்கப்பட்டுள்ள பயிலுநர்கள் மக்களின் தேவையறிந்து கடமையாற்ற வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்துள்ளார்.

பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் நாடளாவிய ரீதியான ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 104  பயிலுநர்களிற்கான தொழில் பயிற்சி தொடர்பான ஆரம்ப நிகழ்வு தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையினரால் இன்று (07) காலை யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு என்னும் தொனிப் பொருளில் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வேலை வழங்குதல் நிகழ்ச்சி திட்டத்தில் கல்வியை பூர்த்தி செய்யாத 35000 பயிலுநர்கள் முதற்கட்டமாக நாடாளாவியரீதியில் தெரிவுசெய்யப்பட்டார்கள் இவற்றுள் யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 104 பயிலுநர்கள் பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்டு அவர்களிற்கான தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது.

இன்றைய தொழில் பயிற்சி நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் முகாமையாளர், தேசிய தொழில்பயிற்சி அதிகார சபையின் தலைக்காரியாலய பணிப்பாளர் சமர திவாகர, யாழ்ப்பாண மாவட்ட பல்நோக்கு அபிவிருத்தி செயலணி உதவிப் பணிப்பாளர் கப்பன் நிஷாந்த், கிளிநொச்சி மாவட்ட பல்நோக்கு அபிவிருத்தி செயலணி உதவி பணிப்பாளர் மேஜர் எஸ். மலிங் ரத்ன, விவசாய பணிப்பாளர் திருமதி ஸ்ரீரங்கன், திரு ஜெயபாலன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.ச.கி.நி.கமலராஜன் மற்றும் பயிலுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்…

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய யாழ்  மாவட்ட அரசாங்க அதிபர்அதிமேதகு ஜனாதிபதியினுடைய கொள்கைப் பிரகடனமான சுபிட்சத்தின் நோக்க அடிப்படையிலே வேலைவாய்ப்பற்ற வறிய குடும்பத்தினருக்கு வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வேலை வாய்ப்பை வழங்கப்பட்டுள்ளது

வறுமை நிலையினை  அடிப்படையாகக் கொண்டு குறிப்பாக கல்வியை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருக்கின்ற ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங்களை அவர்களுடைய வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதனை இலக்காகக் கொண்டே இந்த ஒரு லட்சம் குடும்பங்களில் இருந்து முதல் கட்டமாக நாடு பூராகவும் 35,000 பயிலுநர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் அவர்களில் யாழ்,கிளிநொச்சி மாவட்டங்களில் 104 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்

இந்த பயிற்சியானது பயிலுநர்களைதொழில் ரீதியாக வலுப்படுத்தி அவர்களுடைய திறமைகளை மேலும் மேம்படுத்தி தொழில்வாண்மை உள்ளவர்களாக மேம்படுத்தி வளப்படுத்தி தெரிவு செய்த தொழிலை திறம்பட செய்வதற்கும்  அந்த தொழிலை நேர்த்தியாக செய்வதற்கும் இந்த பயிற்சிகள் நிச்சயம் கைகொடுக்கும்

உங்கள் ஒவ்வொருவருக்கும் பல திறமைகள் இருக்கின்றன ஆனால் அந்த திறமைகளை சரியாக இனங்கண்டு அவற்றை செயற்படுத்த இந்த பயிற்சிள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

குறித்த பயிற்சிக்கு 104 பயிற்சியாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள் அதிலே சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு 10பேர் சமூக சுகாதார தொண்டர்களாக 54 பேர்கள உதவியாளர்களாக நான்குபேர் இடர் முகாமைத்துவதற்திற்கு  24 பேர் சாதிகளாக 8பேருமாக 104பேர் பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்

நீங்கள் ஒவ்வொருவரும்  தெரிவுசெய்யப்பட்ட துறையில் நீங்கள் சிறப்பாக வரவேண்டுமாக இருந்தால் உங்கள் பயிற்சிக் காலத்தின் போது இடையறாது வருகை தந்து குறித்த பயிற்சியினை திறம்படச் செயற்படுத்திக் கொள்ள வேண்டும்

அரச உத்தியோகத்தர்களாகிய எமக்கு வழங்கப்படுகின்ற சம்பளமானது மக்களுடைய வரிப் பணத்தில் இருந்து கிடைக்கின்றது எனவே மக்களுடைய வரிப் பணத்தில் நாம் சம்பளம் பெறும் நாங்கள் மக்களுக்கு  நேர்த்தியாகவும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற கூடியவாறும்சேவையாற்ற முன்வர வேண்டும் அதற்கு ஏற்றவாறு நமது மனப்பாங்கை மாற்றிக் கொள்ள வேண்டும்

ஏற்கனவே உங்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது அதன்மூலம் நீங்கள் பல்வேறுபட்ட அனுபவங்களை பெற்றிருப்பீர்கள் எனவே தங்களுக்கு வழங்கப்படும் அனைத்து பயிற்சிகளும் உங்களைவள படுத்துவதற்காகவே வழங்கப்படுகின்றது

ஏனையவர்களுக்கு கிடைக்காத இந்த சந்தர்ப்பம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவே குறித்த பயிற்சிகளை நீங்கள் திறம்பட செயற்படுத்தி எதிர்காலத்தில்.. சமூகத்திற்கு சிறப்பாக சேவையாற்றி நீங்கள் முன்வர வேண்டும் என தெரிவித்தார்.