Mai 14, 2024

கொரோனாவுடன் வாழுவோமாம்?

கொரோனாவுடன் பழகுவோம். தடுப்பூசியை போடுவோம் என்ற இலங்கை ஜனாதிபதியின் கோசத்திங்கமைய  இனிமேல் தனிமைப்படுத்தல் கிராமங்கள் இல்லையென இலங்கை இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வடமராட்சி வடக்கு கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இனிமேல் இலங்கையில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் என எவையுமே இல்லை எனவும் இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.