Mai 20, 2024

பிரேஸிலில் 24 மணித்தியாலங்களுள் 4,000 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள்!

 

பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நாளொன்றில் பதிவான அதிகூடிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இதுவென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலைகள் நோயாளர்களால் நிரம்பியுள்ளதால், சிகிச்சைகளுக்காக காத்திருந்து பலர் உயிரிழப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரேஸிலில் இதுவரை சுமார் 3,37,000 மரணங்கள் பதிவாகியுள்ளன. எவ்வாறாயினும், தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்கும் எண்ணமில்லை என பிரேஸில் ஜனாதிபதி Jair Bolsonaro தெரிவித்துள்ளார்