April 28, 2024

ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க ஜோ பைடன் ஒப்புதல்

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை தவிர்க்க உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை நடத்தாமல் இருந்தால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

“படையெடுப்பு தொடங்கும் தருணம் வரை, அதனை தடுக்க இராஜீய நிலையிலான நடவடிக்கையை தொடர நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்பதில் பைடன் நிர்வாகம் தெளிவாக உள்ளது என்று வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் ஜென் சாகி கூறினார்.

ஆக்கிரமிப்பு நிகழாத வரை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கனும் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவும் வியாழன் அன்று ஐரோப்பாவில், சந்திப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு அறிக்கையில், Psaki, “நாங்கள் இராஜீய நடவடிக்கைகளுக்கு எப்போதும் தயாராக இருக்கும் நேரத்தில், ரஷ்யா போரைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்போது, ​​உக்ரைன் மீது முழு அளவிலான தாக்குதலுக்கு ரஷ்யா தொடர்ந்து தயாராகி வருவதாகத் தெரிகிறது. ”

ஞாயிற்றுக்கிழமை இரு தலைவர்களுடனான ஒரு நாள் பேச்சு வார்த்தைக்குப் பிறகு, இரு தலைவர்களையும் சந்திக்க வைக்க பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் முயற்சி எடுத்துள்ளார்.

இதற்கிடையில், உக்ரைனில் ராணுவ வீரர்கள் மற்றும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் இடையே கடுமையான தாக்குதல் நடந்து வருகிறது. திங்களன்று கிய்வ் அரசாங்கப் படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறிய கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் தற்போது பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக, ரஷ்யாவின் RIA செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

முன்னதாக கியேவில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20) அன்று, ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சம் நிலவுவதால், உக்ரைனில் அத்தியாவசிய பணியில் அல்லாத இந்திய குடிமக்களும், இந்திய மாணவர்களும், உக்ரைனை விட்டு தற்காலிகமாக வெளியேறுமாறு வலியுறுத்தியது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert