April 26, 2024

மீண்டும் மண் கவ்வியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Rajavayothi Sampanthan, leader of the political proxy of the Tamil Tigers, the Tamil National Alliance (TNA), addresses reporters during a media conference in Colombo, January 6, 2010. The TNA on Wednesday unanimously backed the presidential bid of presidential candidate Sarath Fonseka who crushed the separatists in May, saying it was the only way to thwart incumbent Mahinda Rajapaksa's re-election. REUTERS/Stringer (SRI LANKA - Tags: ELECTIONS POLITICS)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இதனால் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவுசெய்வதற்கான தேர்தல் விரைவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ச.தணிகாசலம் தலைமையில் இன்று(07) இடம்பெற்றது. கடந்தமாதம் இடம்பெற்ற அமர்வில் சபையின் 2022 ஆம் ஆண்டிற்க்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்றையதினம், மீண்டும் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட போது மக்கள் சார்பான வேலைத்திட்டத்திற்கு போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என உறுப்பினர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த வரவுசெலவுத் திட்டத்தினை தோற்கடிக்கவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வி.சஞ்சுதன் தெரிவித்தார். அவரது கருத்தினை தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் முகுந்தன் வழிமொழிந்தார்.

இதனையடுத்து வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக தமிழர் விடுதலை கூட்டணி, பொதுஜன பெரமுன, ஜக்கிய தேசிய கட்சி, சுதந்திரக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முண்ணனி, சுயேட்சை குழு ஆகியவற்றைச் சேர்ந்த 17 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதனால் 9 மேலதிக வாக்குகளால் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது.