Mai 5, 2024

பொதுசன வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஆதரவினை வழங்குமாறு-எம்.கே சிவாஜிலிங்கம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுசன வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஆதரவினை வழங்குமாறு குவாட் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழ் இந்த பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில், குவாட் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய உறுப்பு நாடுகளின் தூதுவர்களுக்கு எழுத்து மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுசன வாக்கெடுப்பை நடத்துவதற்கு குவாட் நாடுகளை ஒருங்கிணைப்பதற்கான பணிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என இந்தியாவிடம் கோரியுள்ளதாக எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.