Mai 17, 2024

சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் கொரோனா!

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் வடமாகாண பிரதம செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடனான கலந்துரையாடல் ஈடுபட்டதன் பேரில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்  ஆ கேதீஸ்வரன் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார்.

அவருக்கான பிசிஆர் முடிவு இன்று வெளியானதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே பிரதம செயலாளருடனான கூட்டத்தில் பங்கெடுத்ததன் மூலம் மேலும் பல அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.