April 30, 2024

வடமாகாணசபை:கைதடிக்கும் வந்தது?

வடமாகாணத்தில் அரச அலுவலகங்களை கொரோனா வேகமாக தாக்கிவருகின்றது.

இன்றைய தினம் வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில் கைதடியிலுள்ள அவடமாகாண பிரதம செயலாளர் அலுவலகத்திலும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சந்தேகம் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வல்வெட்டித்துறை நகரசபை, தொழில் திணைக்களம்,பிரதேச செயலகங்கள் என முடக்க நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது கைதடியிலுள்ள பிரதம செயலாளர் கொத்தணியிலும் கொரோனா பரவல் சந்தேகம் எழுந்துள்ளது.