Mai 6, 2024

Dr.இளஞ்செழியபல்லவன் அன்புடன் நதுநசி. எழுதியுள்ளகவிதை !


தாயகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பலராலும் மிக சிறப்பாக பேசப்படுகின்ற.ஒரு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணராக திகழும் மருத்துவர் இளஞ்செழியபல்லவன் அவர்கள்.இன்றைய எஸ் ரிஎஸ் தொலைக்காட்சி மருத்துவரும் நாமும் நிகழ்வில் கலந்துகொண்டார் இவர்பதிவை youtubeபில் பதிவேற்றியிருந்தோம் அவர் சேவையை பார்த்து அவருக்காக கவிதை ஒன்றை youtube பதிவிட்டதை உங்கள் பார்வைக்காய் தருகிறோம் அத்தோடு இவர் ஆழுமை பார்த்து
கவிதையால் மாலை தந்த நதுநசி. அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

வழி தந்த புத்தகம்
விழி திறந்து கற்றிட…..

சொல்லிச் செல்ல
சொற்பமல்ல…
இவர் தந்த சொத்து.

கற்றுச் செல்ல
நல்ல பாடம்…
இவர் கடந்த தடம்.

நினைத்துப் பார்க்க
வலிகள் தானே
கூடிக் கனக்கும்.

கனமான பாதை
சுடு சொல் கூட
புண் தந்து நிற்கும்.

இலக்கு சொல்ல
யார் இருக்கு?
சூழல் தந்த பாதையில்…

தானே நடந்த
தனி மனிதம்
என பார்க்கிறேன்.

வியந்து நிற்க
இவர் புதியதல்ல.
புதுமை தந்தவர்.

எடுத்துச் சொல்லு
இவர் தடத்தை.
நடந்து செல்வதற்காக….

பள்ளிப் பிள்ளை
கற்றுக் கொள்ள
நல்ல பாடம் என்று.

கற்றுத் தேற போதும்
இவர் வாழ்வின் வழி.
ஏழை கூட உயர்ந்திட.

காசும் கனக்காது
இவர் பாதையில்
பேச்சும் இருக்காது.

செயல் கொண்டு
விளைவாக இவர்
நம் முன் நியமாக!…..

கண் முன்னே
கண்ணானை காண்.
இது இவர் பெயர்.

இனி தடையில்லை.
நடை போடு நீ.
ஆகிட இவர் போல்.

மறந்திடக் கூடாது
செழியன் வாழ்வின்
படிகளின் பற்றை.

தேடிட போராடு.
வீண் வழி விலக்கி.

தலை நிமிர இவர்
வழியிருக்கு …..
தினம் உனக்கு.
…….. அன்புடன் நதுநசி.