Mai 9, 2024

முப்படைகளுக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி வெளியிட்ட விசேட வர்த்தமானி

 

இன்று (22) முதல் நாடு முழுவதும் பொது ஒழுங்கை பராமரிக்க முப்படைகளுக்கும் அழைப்பு விடுத்து ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவு (அத்தியாயம் 40) மூலம் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இதை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்தறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம், ஆகிய மாவட்டங்களில் பொது ஒழுங்கை பராமரிக்க இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை அழைக்கப்பட்டுள்ளன.

மற்றும் கண்டி, மாத்தளை, நுவரெலியா, கிளிநொச்சி, வவுனியா, குருநாகல், அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய நிர்வாக மாவட்டங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.